சென்னை

மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 15 வரை சென்னையில் கூடுதலாக 70 மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பராமரிப்பு பணிகள் காரணமாக செனை கடற்கரை தாம்பரம் இடையே ஆன மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன.  இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாக உள்ளார்கள்.

எனவே பொதுமக்கள் வசசிக்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை கூடுதலாக 70 மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இவற்றில் பல்லாவரம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு 20 பேருந்துகளும் கூடுவாஞ்சேரிக்கு 30 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து தி.நகர் பிராட்வேவுக்கு கூடுதலாக 20 பேருந்துகள்  இயக்கப்பட உள்ளன

இந்த மாநகர பேருந்துகள் இன்று முதல் 15-ம் தேதி வரை இயக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.