கான்பூர்

த்தரப்பிரதேச மாநிலத்தில் 7 வயது சிறுமி பூஜைக்காக உள்ளுறுப்புக்களை எடுக்கக் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் 7 வயது சிறுமியின் உடல் காவல்துறையினரால் கண்டு எடுக்கப்பட்டது.   அந்த சிறுமியின் உடலில் இருந்து கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புக்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தன.  மேலும் உடற்கூறு ஆய்வில் அந்த சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.

பிரான், அன்குல்

இது குறித்து காவல்துறை விசாரித்ததில் பரசுராம் – மற்றும் சுனைனா தம்பதியர் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.  இருவரும் கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணமாகி இதுவரை குழந்தைப்பேறு இன்றி உள்ளனர்.  எனவே பூஜை நடத்தி குழந்தை வரம் பெறப் பெண் குழந்தையின் உள்ளுறுப்புக்கள் தேவை என அதே பகுதியைச் சேர்ந்த பிரான், அன்குல் ஆகியோரிடம் ரூ.1000 கொடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அன்று இரவு அவர்கள் இருவரும் கடைக்கு சென்றுக் கொண்டிருந்த 7 வயது சிறுமியைக் கடத்தி உள்ளனர்.  மது போதையில் இருந்த இருவரும் அந்த சிறுமியைக் கூட்டு பலாத்காரம் செய்து அதன்பிறகு கொலை செய்துள்ளனர்.   சிறுமியின் உடலை வெட்டி உள்ளுறுப்புக்களை எடுத்து பரசுராம் தம்பதியினரிடம் ஒப்படைத்து சடலத்தைக் கோவில் அருகே போட்டுள்ளனர்.

இதையொட்டி பரசுராம் தம்பதியர் மற்றும் குழந்தையைக் கடத்திய இருவர் என நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிகழ்வு மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.   அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் உதவித்தொகை அளித்துள்ளதோடும் இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.