சென்னை: வார இறுதி நாட்​களை​யொட்டி சென்னையில் இருந்து  நாளை முதல் 586 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. கடந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகை வார இறுதி நாட்களை முன்னிட்டு 706 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் 586 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து விரைவு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரும் 28, 29 (சனி, ஞாயிறு) வார  விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 586  சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனப்டி,  வரும் 28, 29 (சனி, ஞாயிறு) வார இறுதி நாட்கள் என்ப​தால் டிச.27, 28 தேதி​களில் தமிழக அரசு போக்கு​வரத்​துக் கழகங்கள் சார்​பில் சிறப்பு பேருந்​துகளை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

சென்னை கிளாம்​பாக்​கத்​திலிருந்து திரு​வண்ணா​மலை, திருச்சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோயம்​புத்​தூர் உள்ளிட்ட இடங்​களுக்கு 485 பேருந்​துகளும், கோயம்​பேட்​டிலிருந்து திரு​வண்ணா​மலை, நாகை, வேளாங்​கண்ணி, ஓசூர், பெங்​களூரு ஆகிய இடங்களுக்கு 81 பேருந்துகளும், மாதவரத்​திலிருந்து 20 பேருந்​துகளும் கூடு​தலாக இயக்​கப்​படு​கின்றன.

இவ்வாறு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.