சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மீது அமலாக்கத்துறை 5ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இதன் காரணமாக, அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் ஒருவர். இவர் இந்த வழக்கில் தொடர்புடையவர். இவரை பலமுறை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகாமல் சுமார் இரண்டு ஆண்டு காலம் தலைமறைவாக இருந்து வந்தார். இதற்கிடையில், அவர் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, அவரது தலைமறைவு காரணம் கூட கேட்டகாமல் உடினயாக முன்ஜாமின் வழங்கினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், அசோக் குமார் மீதான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு அமலாக்கத்துறை இவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையில், அசோக் குமார் இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி நீதிமற்த்தில் மனு தாக்கல் செய்திருந்தார், இதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.விசாரணை முடிவில், அசோக் குமார் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.