சிட்டகாங்

மது அண்டை நாடான வங்க தேசத்தில் கண்டெயினர் டிப்போவில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிர் இழந்துள்ளனர்.

நமது அண்டை நாடான வங்க தேசத்தில் உள்ள சிட்டகாங் நகரில் இருந்து 40 கிமீ தொலைவில் ஒரு தனியார் சேமிப்பு கிடங்கு ஒன்று அமைந்துள்ளது.   நள்ளிரவு இந்த கண்டெயினர் டிப்போவில் பயங்கர தீ விஅத்து ஏற்பட்டுள்ளது.    காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றுள்ளனர்.

அங்கு அதே நேரத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.  இதனால் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 450க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.   இதில் இதுவரை 49 பேர் உயிர் இழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.   இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கண்டெயினர் டிப்போவில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த ரசாயனங்களின் எதிர்வினை காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.   இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களில் சுமார் 350 பேர் சிட்டகாங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மீதம் உள்ளோர் மற்ற மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.