திபெத்
நேற்று திபெத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் அமைந்துள்ளது. இங்கு கடந்த மாதம் 7 ஆம் தேதி ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நேற்று மதியம் 12.42 மணி அளவில் திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 28.33 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 87.52 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel