சென்னை

சென்னை பூந்தமல்லி – போரூர் இடையே நாளை மறுநாள் மெட்ரோ ரயில் 3 ஆம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது .

தற்போது சென்னையில் செயல்படுட்தப்படும் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.

இந்த மார்க்கத்தில் பூந்தமல்லி – போரூர் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதால் இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி இந்த வழித்தடத்தில் முதற்கட்ட டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. அ[ப்போது பூந்தமல்லி – முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பாதையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயல் இயக்கி சோதனை வெற்றியடைந்தது.

பிறகு இதே வழித்தடத்தில் 2ம் கட்ட சோதனை ஓட்டம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி நடைபெற்றது. தற்போது இந்நிலையில், பூந்தமல்லி – போரூர் வழித்தடத்தில் நாளை மறுதினம் 3ம் கட்டமாக மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இப்போதும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட உள்ளது.