சென்னை: தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 38 மருந்துகள் தரமற்றவை என்றும், நாடு முழுவதும் 136 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்ட தாக  அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மற்றும் தயாரிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் குறித்த, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி,   கடந்த 2022-23 ஆம் ஆண்டில் 2900க்கும் அதிகமான மருந்துகள் தரமற்றவை எனக் கண்டுபிடிக்கப்பட்டு அவை தடை செய்யப்பட்டது. அதற்கு முன்னதாப, கடந்த 2022ம் ஆண்டில்,  இருமல், சளி, காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்துகளில் 50 மருந்துகள் தரமற்றது என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் பட்டியல் வெளியிட்டு, அதை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்தது.

நடப்பாண்டு (2025) ஜனவரி  மாதத்தில் நாடு முழுவதும் பரிசோதிக்கப்பட்ட மருந்து குறித்து மார்ச்சில் வெளியிட்ட அறிவிப்பில், நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள மருந்துகளில்  103 மருந்துகள் தரமற்றவை என  அறிவித்தது. இதுதொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் போலி மருந்து தயாரிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது.

இந்த நிலையில்,  தமிழகத்தில் என்ன மருந்தகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில்,   38 மருந்துகள்  தரமற்றவை என்பது தெரிய வந்துள்ளதாக,  மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்  கூறி உள்ளது.   மொத்தம்  நாடு முழுவதும் 136 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டதாக  அறிவித்துள்ளது.

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது. அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.