கோவை: ஆளுநர் ரவி தலைமையில் ஊட்டியில் இன்று தொடங்கி உள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டில் உள்ள 52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழக பிரதிநிதிகள் பங்கேற்று இருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் விவகாரத்தில்  தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்டிய நிலையில், தற்போது, ஏட்டிக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் 2 நாள் துணைவேந்தர்கள் மாநாட்டை கூறி உள்ளார்.

அதன்படி,  இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டை பல்வேறு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மாநாட்டில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் பங்கேற்கவில்லை. அது கோவை வேளாண் பல்கலைக்கழக பொறுப்பு துணை வேந்தர் தமிழ்வேந்தன் பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டில் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் மங்கையர்கரசி (பொறுப்பு) மாநாட்டில் பங்கேற்கவில்லை. *மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் இல்லாத நிலையில் அதிகாரிகளும் மாநாட்டை புறக்கணித்ததாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், ஆளுநர் மாநாட்டில் 52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்று உள்ளதாக தகவல்வகள் வெளியாகி உள்ளது. ஆளுநர் மாநாட்டை .  ஒட்டுமொத்த துணை வேந்தர்களும் மாநாட்டை புறக்கணித்ததாக தகவல் வெளியான நிலையில் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.