அயர்லாந்து:

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 14 வயது சிறுவனை 2 முறை கற்பழித்த 33 வயது பெண் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பரபரப்பு சம்பவம் அயர்லாந்து நாட்டில் நடைபெற்றுள்ளது.

அயர்லாந்து நாட்டில் உள்ள லாங்ஃபோர்டு என்ற பகுதியில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில்,  பிறந்தநாளை கொண்டாடிய 14 வயது சிறுவனை அவனது தாயாரின் நண்பி ஒருவர், 2 முறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது மது விருந்தை ருசித்த கிம்பர்லி ஏபெல் என்ற  அந்த பெண், பிறந்தநாள் கொண்டாடிய சிறுவனையும் சுவைக்க திட்டமிட்டார். அதையடுத்து, அந்த  சிறுவனை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று  அவனிடம் உறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இதையறிந்த அந்த சிறுவனின் தாயார் ஏபெல் மீது போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, கிம்பர்லி ஏபெல்லைகாவல்துறையினர் கைது செய்தனர்.

அயர்லாந்து நாட்டு சட்டப்படி 16 வயதை கடந்தவர்தான் உடலுறவு மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.