புதுச்சேரி:  வீட்டின் கழிவறைக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் அடுத்தடுத்த விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோகம் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் பகுதியில்  வசித்து பரும் செந்தாமரை என்பவரின் குடும்பத்தில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இந்த வீட்டில்  71வயதான மூதாட்டி செந்தாமரை  உடன் அவரது  மகள் காமாட்சி மற்றும் பேத்தி பாக்கியலட்சுமி  ஆகியோர்  வசித்து வருகிறார். இன்று காலை செந்தாமரை கழிவறைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்பதற்காக மகள் காமாட்சி சென்ற போது அவரும் திடீரென மயங்கி விழுந்தார். இருவரையும் காப்பாற்ற சென்ற சிறுமி பாக்கியலட்சுமியும் அங்கேயே மயங்கி விழுந்தார்.

இவர்களது அலறல் சந்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர்,   உடனடியாக அவர்கள்  மூவரையும் பாதுகாப்பாக  மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு  3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து  தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதில்,  அந்த வீட்டில்  பாதாள சாக்கடை அடைப்பினல் ஏற்பட்ட விஷவாயு தாக்குதலில் அவர்கள் பலியாகி இருக்கலாம் என்பதை கண்டறிந்தனர். அந்தவீட்டில்,  கடந்த சில நாட்களாக அடைத்திருந்ததாகவும், இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, அநத் பகுதியில்  வசித்து வரும் சில  குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற  என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தொடர்ந்து பாதாள சாக்கடையில் தேங்கியுள்ள நீரை அகற்றவும், அடைப்புகள் ஏதேனும் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு  உள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் அடுத்தடுத்து விஷவாயு தாக்கி உயிரிழந்த இந்த சம்பவம்  பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.