வாஷிங்டன்: அமெரிக்காவின் விளையாட்டு அரங்கில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் இல்லினாய்சில் உள்ள விளையாட்டு அரங்கில் இந்த விபரீதம் அரங்கேறி உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் கூறி இருப்பதாவது:

சம்பவம் நடந்த விளையாட்டு அரங்கத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் விசாரணை நடந்து வருகிறது. 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.