கோழிக்கோடு

கேரள கோவில் திருவிழாவில் யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட போது இடையில் சிக்கிய 3 பக்தர்கள்  உயிரிழந்துள்ளனர்,

நேற்ரு மாலை கேரளவின் கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடைபெற்றது. விழாவுக்கு கோகுல், பீதாம்பரம் ஆகிய வளர்ப்பு யானைகள் நெற்றி பட்டம் கட்டியவாறு ஊர்வலமாக அழைத்து வந்தனர். பிறகு சுவாமி வீதி உலா நடைபெற்ற போது தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

வளர்ப்பு யானைகளான கோகுல், பீதாம்பரம்  ஆகியவை அப்போது திடீரென ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதால் கோவிலுக்கு வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலறியடித்து ஓடினர். இந்த யானைகளை கட்டுப்படுத்த பாகன்கள் முயன்றும்ம் யானைகள் கடுமையாக மோதிக்கொண்டன.

இந்த யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், கோவில் அலுவலகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து., யானைகளுக்கு இடையே சிக்கி கெயிலாண்டி பகுதியைச் சேர்ந்த லீலா (வயது65), அம்மு குட்டியம்மா (70), ராஜன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.. மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்த கோழிக்கோடு போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். படுகாயம் அடைந்த 30க்கும் மேற்பட்டோரையும் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களில் 5 பேரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. கோழிக்கோடு மாவட்ட உயர் அதிகாரிகள், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இணையத்தில் கோவில் திருவிழாவில் யானைகள ஒன்றுக்கொன்று மோதிக் கொண்ட வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.