மிசிசிப்பி:
மெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து வெளியான செய்தியில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும், படுகாயமடைந்தவர்களும் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக காவல்துறையினர் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடந்த இடத்தில் 50-க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் சிதறி கிடந்திருப்பதாகவும், அவை பல்வேறு துப்பாக்கிகளில் இருந்து சுடப்பட்டவை என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.