சென்னை

போதைப் பொருள் வைத்திருந்த மூவர் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் போதை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஆங்காங்கே போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் செய்தி அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

கடந்த 24 ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து 24.07.2024 அன்று 5.970 கிலோ மெத்தாம்பெட்டமைனை போதைப்பொருள் தடுப்புப் பிரிவை சேர்ந்த சென்னை காவல்துறையினர் மீட்டுள்ள்னர். மேலும் இருவர் அதே பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரெட்ஹில்ஸ் பகுதிக்கு அருகே போதைப் பொருள்களை பதுக்கி வைக்க பயன்படுத்திய குடோன் இருப்பது தெரியவந்தது. கடந்த 27.07.2024 அன்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவு குழு குடோனில் சோதனை நடத்தி 954 கிராம் மெத்தம்பேட்டமைன் மற்றும் 7 லட்ச ரூபாய் ஆகியவற்றை மீட்டனர்.

இந்த விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்திருப்பதாக போதை பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.