ராமேஸ்வரம்
பாம்பன் ரயில் பாலம் திறக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் வரையிலான 28 ரயில் சேவைகல் மீண்டும் இயக்கப்பட உள்ளன.
ரூ.550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ராமேசுவரம் புதிய பாம்பன் ரயில் பாலத்தை, பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார். இதையொட்டி ராமேஸ்வரம் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாலம் கட்டுமான பணி காரணமாக ராமேசுவரம் செல்ல வேண்டிய ரெயில்கள் மண்டபம் வரையில் மட்டுமே இயக்கப்பட்டது. இன்று ரயில் பாலம் இன்று திறக்கப்பட உள்ளதால், மீண்டும் ரெயில்கள் ராமேஸ்1ரம் வரையில் இயக்கப்பட உள்ளன.
ராமேசுவரத்தில் இருந்து திருச்சிக்கு நாளை (திங்கட்கிழமை) மதியம் 2.50 மணிக்கு விரைவு ரயில் புறப்படுகிறது. மறுமார்க்கமாக, திருச்சியில் புறப்படும் விரைவு ரயில் ராமேசுவரத்துக்கு நாளை பகல் 12.25 மணிக்கு வருகிறது.
ராமேசுவரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை மாலை 5.30 மணிக்கு விரைவு ரயில் புறப்படுகிறது.,
கோவையில் புறப்படும் ரயில் வருகிற 8-ந் தேதி காலை 6.15 மணிக்கு ராமேசுவரத்துக்கு வருகிறது. ராமேசுவரத்தில் இருந்து கோவைக்கு வருகிற 9-ந் தேதி இரவு 7.30 மணிக்கு விரைவு ரயில் புறப்பட்டு செல்கிறது.
ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் நாளை ராமேசுவரத்தில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக மதுரை-ராமேசுவரம் ரயில் காலை 10.45 மணிக்கு ராமேசுவரம் வந்தடைகிறது. பின்னர், காலை 11.40 மணிக்கு மீண்டும் மதுரை புறப்பட்டு செல்கிறது.
இவைகளுடன் மொத்தம் 28 ரெயில் சேவைகள் புதிய பாம்பன் பாலம் வழியே ராமேசுவரத்துக்கு இயக்கப்பட உள்ளன.