ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 போ் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சுபங் நகரத்தைச் சோ்ந்த  பள்ளி  மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோர்கள் தாசிக்மாலயா மாவட்டத்தில் உள்ள புனித தலத்துக்கு சுற்றுலா சென்றிருந்தனர். சுற்றுலா முடிந்து அவர்கள் பேருந்தில் ஊா் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, சுமேதங் மாவட்டத்தில் அவா்கள் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 20 மீட்டா் ஆழம் கொண்ட பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. கோர சம்பவத்தில், ஓட்டுநா் உள்பட 27 போ் உயிரிழந்தனா், 39 போ் காயமடைந்தனா்.

அவா்களில் 13 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. முதல் கட்ட விசாரணையில் பேருந்தின் பிரேக் பழுதானதால் விபத்து நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.