சென்னை

மிழகத்தில் இன்று 29,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 32,34,2636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,50,931 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,10,54,111 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 29,976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிமாநிலங்களில் இருந்து 18 பேர் வந்துள்ளனர்.   இதுவரை 32,24,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 47 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,359 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 27,507 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 29,73,185 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,12,692 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 5,973 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,10,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 23 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,876 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 8,693 பேர் குணம் அடைந்து மொத்தம் 6,53,126 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 48,111 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 3,740 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 1,883 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 2,98,929 பேர் பாதிக்கப்பட்டு 2,550 பேர் உயிர் இழந்து 2,69,342 பேர் குணம் அடைந்து தற்போது 27,037 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,17,757 பேர் பாதிக்கப்பட்டு 2,597 பேர் உயிர் இழந்து 1,98,571 பேர் குணம் அடைந்து தற்போது 16,59 பேர் சிகிச்சையில் உள்ளனர்.