சென்னை: “ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு” மாநாடு சென்னை கலைவாணர் அங்கில் இன்று தொடங்கியது. இநத மாநிலட்டை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில்,  1,695 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்  24 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தொடர்ந்து, 21 ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் பங்கேற்ற ஏற்றுமதி கண்காட்சியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் செப்டம்பர் 20-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை ‘வர்த்தகம் மற்றும் வணிக வாரம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி, தமிழ்நாட்டில்,  “ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு இன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவரது முன்னிலையில் ரூ.2120.54 கோடி முதலீட்டில் 41 ஆயிரத்து 695 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 24 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முதலீடுகள் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் செய்யப்பட்டு உள்ளன. ஜவுளி, ரசாயனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், எக்கு பொருட்கள், தோல் ஆடைகள், பொது உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இ-காமர்ஸ் தளங்களில் பயிற்சி அளித்து அந்த நிறுவனங்களை தேசிய சந்தைகளுக்கு மட்டுமின்றி உலகளாவிய சந்தைகளுக்கும் தயார் செய்திடும் திட்டத்திற்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறையின் எம்.டி.ஐ.பி.பி. நிறுவனம் பிலிப்கார்ட், வால்மார்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் ஜெர்மனி நாட்டுக்கு இடையே முதலீடுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் போன்றவற்றுக்காக இணைந்து செயல்படும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் எம்-டி.ஐ.பி.பி. நிறுவனம் இந்தோ-ஜெர்மன் சேம்பர் ஆப் காமர்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளது.