டெல்லி

டெல்லியில் அமைந்துள்ள மகளிர் ஆணையத்தில் 223 ஊழியர்கள் பணி நீக்கம்  செய்யப்பட்டுள்ளனர்.

விதிகளை மீறி டெல்லி மகளிர் ஆணையத்தில் ஊழியர்கள் நியமனம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எமவே இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் விதிகளை மீறி ஊழியர்கள் நியமனம் செய்தது தெரிய வந்தது.

எனவே மகளிர் ஆணையத்தில் பணிபுரிந்த வந்த 233 ஊழியர்களை பணி நீக்கம் செய்யுமாறு, டெல்லி ஆளுநர் சக்சேனா அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

ஏற்கனவே டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக ஸ்வாதி மாலிவால் இருந்து வந்தார்.

ஸ்வாதி மாலிவால்  மகளிர் ஆணையத்தின் தலைவி யக இருந்த போது, விதிகளுக்கு மாறாக அனுமதியின்றி ஊழியர்களை நியமித்ததாகக் கூறப்படுகிறது.  எனவே இந்த புகார் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஸ்வாதி மாலிவால் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-யாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]