டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது.  383 பேர் தொற்று பாதிப்பு காரணமாக பலியான நிலையில், 34,167 பேர் தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பி உள்ளனர்.

மத்திய சுகாதாரத்து இன்று காலை ) 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில்) வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், 26,964 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,35,31,498 ஆக உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில் மேலும் 383 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 445768 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக குறைந்துள்ளது.

அதுபோல கடந்த 24மணி நேரத்தில்  தொற்றில் இருந்து  34, 167 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 32783741 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 97.75% ஆக உயர்ந்துள்ளது

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 301989 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.92% ஆக உள்ளது.

இந்தியாவில் இதுவரை 82,65,15,754 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 75,57,529 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.