சென்னை:
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதில், 557 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி,
சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை: 8,228
நோய் தொற்றில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை: 2826.
பலியானோர் எண்ணிக்கை: 59
தற்போது நோய்தொற்றால் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை: 5300

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் பொருத்த வரை ராயபுரத்தில் அதிகபட்சமாக 1,538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,192, திரு.வி.க. நகரில் 976, தண்டையார்பேட்டையில் 773, அண்ணா நகரில் 662 ஆக கோரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel