டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 0,302 பேருக்கு கொரோனா பாதிப்பு இதில் 50% கேரளாவில் பதிவாகி உள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், புதிதாக மேலும் 10,302 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதில் 5,754 பேர் கேரளாவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,99,925 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மேலும் 267 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 49 பேர் கேரளாவில் மட்டும் பலியாகி உள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,65,349 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.35% ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 11,787 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,39,09,708 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.29% ஆக உயர்ந்துள்ளது
தற்போது நாடு முழுவதும்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,24,868 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 531 நாளில் மிகக்குறைவானது. தற்போது தொற்று பரவல் 1 சதவிகிதமாகவே உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,59,931 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,15,79,69,274 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று 10,72,863 சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. இதுவரை 63,05,75,279* சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.