ஸ்பெல்கேம்ப்

ஜெர்மனி நாட்டில் உள்ள எஸ்பெல்கேம்ப் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜெர்மனி நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாகாணத்தில் ஏச்பெல்கேம்ப் என்னும் நகரம் உள்ளது.   இந்த நகர் ஜெர்மனியின் புகழ் பெற்ற நகரான ஹனோவருக்கு 80 கிமீ தூரத்தில் உள்ளது.  இங்குள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் ஒருவரும் அருகில் உள்ள தெருவில் ஒருவரும் என இருவர் இன்று மதியம் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் இழந்துள்ளனர்.

இறந்தவர்களில் ஒருவர் ஆண் மற்றும் ஒருவர் பெண் ஆவார்கள்,.  இந்த சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதலாகத் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர் இதை ஒரு கொலை வழக்காகப் பதிவு செய்துள்ளனர்.  பட்டப்பகலில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்வால் நகர மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   

துப்பாக்கியால் சுட்டவர் குறித்த விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.  துப்பாக்கியால் சுட்டவர் தப்பி ஓடி உள்ளார்.  அவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  இந்த நிகழ்வால் நகர மக்களுக்கு எவ்வித அபாயமும் இல்லை எனக் கூரும் காவல்துறையினர் எவ்வித எச்சரிக்கையும் விடுக்கவில்லை.