வாஷிங்டன்:

அமெரிக்காவின் தென்கிழக்கு லூசியான பல்கலைக்கழகத்தில் இன்று மர்ம ஆசாமி துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் ஹம்மாண்ட் நகரில் தென்கிழக்கு லூசியான பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு நேற்று காலை 2 மணியளவில் மர்ம ஆசாமி ஒருவன் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.

இதில் 2 பேர் காயமடைந்தனர். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. துப்பாக்கியால் சுட்ட மர்ம ஆசாமி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.