ரக்கோணம்

லெவல் கிராசிங்கில் பணி நேரத்தில் தூங்கிய இரு கேட்கீப்பர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

நேற்று முன் தினம் காலை கடலூா் அருகே உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று கடலூர் முதுநகர் அடுத்த செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டை கடக்க முயன்றபோது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரெயில், அந்த வேன் மீது மோதி இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த  விபத்துக்கு காரணமாக கூறப்படும் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், அவரை சிதம்பரம் ரயில்வே போலீசார் கைது செய்தனர். இதையொட்டி கேட் கீப்பர்கள் பணியின் போது உறங்கினால் பணியில் இருந்து நீக்கும்படி தெற்கு ரெயில்வே உத்தரவிட்டத

அரக்கோணம்-செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் லெவல் கிராசிங் பகுதிகள் ஆய்வு நடத்தப்பட்டபோது,  கேட் கீப்பர்களான கார்த்திகேயன் மற்றும் ஆஷிஷ் குமார் ஆகியோர் பணியின் போது உறங்கியது ஆய்வில் கண்டறியப்பட்டது. எனவே பணியின் போது தூங்கிய 2 கேட் கீப்பர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.