குவஹாத்தி:
அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஒட்டு போடப்பட்டது கண்டுபிடிக்கபட்டது.

அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1 ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பின் போது 90 செல்லுபடியாகும் வாக்காளர்களைக் கொண்ட ஒரு சாவடி 181 வாக்குகளைப் பதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் பணியில் இருந்து ஆறு பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel