சென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவையானஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்துவிட்டோம் என  முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில்,  COVID19 சிகிச்சைக்கு புதிதாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 7800 படுக்கைகள் உட்பட மொத்தம் 17000 படுக்கைகள் அமைக்கப் பட்டுள்ளன; தமிழ்நாட்டுக்கான oxygen தேவையை பூர்த்தி செய்துவிட்டோம்; தடுப்பூசி செலுத்துவதை இயக்கமாக மாற்றி வருகிறோம் என தெரிவித்து உள்ளார்.