சென்னை: மாநில தலைநர் சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 16 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  3,38,055 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 1,16,650-ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில்  1009 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,02,698 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தின் மொத்த பாதிப்புகளில் பாதிய அளவு சென்னையில் மட்டுமே உள்ளது.

சென்னையில்   ஒரே நாளில் சென்னையில் மட்டும் 22 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனால், சென்னையில் மட்டும், கொரோனா பலி எண்ணிக்கை  2,454 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், இன்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  3 பேரும், ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை, கிண்டி கொரோனா மருத்துவமனையில் தலா ஒருவரும் இறந்து உள்ளனர்.

 மேலும் ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனை, அடையாறு தனியார் மருத்துவமனையில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.