பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹூபளியில் 150 காவல் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது காவலர்கள் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2.5 லட்சத்தை தாண்டியது.  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,73,80,703 ஆக உயர்ந்தது. அதுபோல தொற்று பாதிப்புக்கு இதுவரை 4,86,451 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை  3,52,37,461  பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 16,56,341 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கர்நாடகாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது.  கர்நாடக மாநிலம் ஹூபளி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் 150 அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மிதமான பாதிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளதால் அனைவரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.