சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது. சென்னையில், தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2.20ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதுவரை 8,00,029பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 7,78,081 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள நிலையில், இதுவரை  11,909 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும்,  கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,20,211 ஆக உள்ளது.  தற்போதைய நிலையில், 3,153 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,13,134 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதே வேளையில், தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி  3924 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் பின்வருமாறு:- 

கோடம்பாக்கம் – 342 பேர்

அண்ணா நகர் – 380 பேர்

தேனாம்பேட்டை – 285 பேர்

தண்டையார்பேட்டை – 139 பேர்

ராயபுரம் – 197 பேர்

அடையாறு- 377 பேர்

திரு.வி.க. நகர்- 304 பேர்

வளசரவாக்கம்- 180 பேர்

அம்பத்தூர்- 255 பேர்

திருவொற்றியூர்- 63 பேர்

மாதவரம்- 124 பேர்

ஆலந்தூர்- 192 பேர்

பெருங்குடி- 149 பேர்

சோழிங்கநல்லூர்- 65 பேர்

மணலியில் – 52 பேர்.

[youtube-feed feed=1]