பிரயாக் ராஜ்
தற்போது உ பி மாநிலத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவை முன்னிட்டு 1400 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன/
கடந்த ஜனவரி 13 ஆம் தேதி 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி உத்தர பிரதேசத்தில் தொடங்கி பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு, 60 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
மகா கும்பமேளாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பக்தர்களின் வசதிக்காக 14 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 92 சதவீதம் அளவுக்கு மெயில், எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட், பயணிகள் ரயில்கள் மற்றும் மெமு சேவைகளும் செயல்படுகின்றன. மேலும்472 ராஜ்தானி மற்றும் 282 வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்படுகின்றன.
மகா கும்பமேளா நிகழ்ச்சியை முன்னிட்டு, இயக்கப்படும்14 ஆயிரம் ரயில்களில் பாதி ரயில்கள் உத்தர பிரதேசத்தில் இருந்தும், 11 சதவீதம் டெல்லியில் இருந்தும், 10 சதவீதம் பீகாரில் இருந்தும், 3 முதல் 6 சதவீதம் மராட்டியம், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.