குவாங்சோ:
சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள  ஜுஹாய் நகரில்  உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் சுரங்கத்தில் வேலை பார்த்து வந்த 14 தொழிலாளர்கள் சிக்கித் தவித்து வருவதாகச் சீனாவின் குவாங்டாங் மாகாணம், உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் தெரிவிக்கையில், இந்த ஷிஜிங்ஷன் சுரங்கப்பாதை இன்று அதிகாலை 3:30 மணியளவில் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பேசிய அதிகாரிகள் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.