சென்னை

ன்று காலை 9.30 மணிக்கு தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

இந்த வருடம் தமிழகத்தில் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி உள்ள்னர். இந்த தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்து முடிந்தது.

ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி, மே 6-ந்தேதி(இன்று) பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 10 ஆம் தேதி பத்தாம்.வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது. தேர்வு முடிவுகள் மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக அனுப்பி வைக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.