சென்னை

ன்று முன் அறிவிப்பின்றி சென்னையில் 12 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று திடீரென சென்னை விமான நிலையத்தில் முன்னறிவிப்பின்றி 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது சென்னையில் இருந்து டெல்லி, சீரடி, ஐதராபாத்துக்கு இயக்கப்படும் 12 விமானங்கள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி சென்னையில் இருந்து 6 புறப்பாடு விமானங்கள், 6 வருகை விமானங்கள் ரத்தாகி உள்ளன.விமான நிறுவனங்கள்,நிர்வாக காரணங்களுக்காக சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

இவ்வாறு திடீரென முறையான முன்னறிவிப்பின்றி 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.