மாஸ்கோ: ரஷியாவில் பேருந்துடன் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்தனா்.

அந் நாட்டின் மத்தியில் உள்ள சமாரா மாகாணத்தின் சிஸ்ரான் என்ற பகுயில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்துடன் அசுர வேகத்தில் மோதியது.

விபத்தில் 12 பேர் பலியாகி உள்ளதாகவும், 11 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

லாரியின் அதி வேகத்தை ஓட்டுநர் கட்டுப்படுத்த முடியாததால் விபத்து நேரிட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.