சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் 11 பேரை  இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இலங்கை கடற்படை மேலும் 11 மீனவர்களை கைது செய்து, அவர்களின் படகையும் பறிமுதல் செய்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், அடித்து விரட்டுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த விஷயத்தில் சமூகமான தீர்வு காணக்கோரி தமிழக மீனவர்கள் பலமுறை வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகள் இலங்கையுடன் பேசி இந்த பிரச்சினைக்கு முடிவு காண முடியாமல் உள்ளது.

இதனால்,  கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளன. மேலும், மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை கடற்படை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. மேலும், மீனவர்களுக்கு சொந்தமான இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.  இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.