சென்னை: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 2,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன்,  54 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் தொடர்பான தகவலை வெளியிட்டு உள்ளது. அதன்படி  தினசரி பாதிப்பு 0.61 சதவிகிதமாக உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில்  புதிதாக மேலும 2,897 பேர் பாதித்துள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,10,586-ஆக உயர்ந்தது.

நேற்று மேலும் 54 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன் மூலம்,  நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,157-ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக உள்ளது.

நேற்று  ஒரே நாளில் மேலும்  2,986 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,66,935-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 19,494 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.05% ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும்  நேற்று ஒரே நாளில் 14,83,878 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,90,67,50,631 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]