சென்னை:
பத்தாம் வகுப்பு துணை தேர்வுக்கான முடிவு இன்று வெளியாகிறது.

இதுகுறித்து அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் துணை தேர்வு நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள்,www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு வெளியாக உள்ளது என்றும், மறுகூட்டலுக்கு, வரும் 25, 26ம் தேதிகளில், மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில், உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel