சென்னை: தமிழ்நாடு புதுச்சேரியில் நாளை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வினை 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடங்க உள்ளது. ஏற்கனவே 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தன. அதைத்தொடர்ந்து 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5-ந் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில் நாளை (மார்ச் 28ந்தேதி) 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை 12,480 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். இவர்களில், 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள் என்றும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்து உள்ளது. மேலும், இவர்களுடன் தனித் தேர்வர்கள் 25,888 பேரும், சிறைவாசிகள் 272 பேரும் எழுதுகிறார்கள்.
மாவர்கள் தேர்வு எழுத 4113 தேர்வு மையங்கள் தயாராக உள்ளது. 48 ஆயிரத்து 426 பேர் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
தேர்வில் முறைகேடு நடக்காமல் கண்காணிக்க 4,858 பறக்கும் படைகள் அமைக்கப்பட் டுள்ளன. மாணவர்கள் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத் தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வு துறை எச்சரித்துள்ளது.
மேலும் தேர்வு பணிகளில் ஈடுபடக் கூடிய ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்து தல், மாணவர்கள் பார்த்து எழுதுவதற்கு உதவுதல் போன்ற தவறான செயல்களுக்கு துணை போகக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே 2,3 நாட்கள் இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஏப்ரல் 15-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.