சென்னை : ”பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறைகளுடன் மார்க் வழங்கப்படும் அது  தொடர்பான வழிமுறைகள், முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன,” என, பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

பள்ளி கல்வி துறையின் பல்வேறு பிரிவுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்வு முடிவுகள், 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்து, சிபிஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகள் கறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் அன்பில் மகேஷ்,  பள்ளிக்கல்வித்துறை சார்பில்,  தினமும் துறை ரீதியான கூட்டம் நடைபெற்று வருகிறது.. அதில், அதிகாரிகளின் கருத்துகள் பெறப்படுகின்றன.  இதற்கிடையில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., மற்றும் பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பாக, மத்திய அரசு விபரங்கள் கேட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வருடன் பேசி, தமிழக அரசின் கருத்தை தெரிவித்து  இன்று கடிதம் அனுப்பப்படும்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஊரடங்கு தளர்வுக்கு பின் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறியவர், தனியார் பள்ளிகளைப்போல ஆன்லைன் வாயிலாக மாணவர் சேர்க்கையை நடத்த அரசு திட்டமிட்டு வருகிறது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கப்படும். தனியார் பள்ளிகளுக்கு நிகராக, ‘ஆன்லைன்’ வழி மாணவர் சேர்க்கையை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர், பல்வேறு மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் வாயிலாக, தன்னார்வத்துடன் கொரோனா தடுப்பு பணிக்கு வந்துள்ளனர். அவர்களை முதல்வரே பாராட்டியுள்ளார்.

கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆசிரியர்கள் குழுவினர், உளவியல் கவுன்சிலிங் தருகின்றனர். அந்த குழுவின் வாயிலாக, கொரோனா பாதிப்புக்கு ஆளான ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்பீட்டு முறைகளுடன், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், சரியான முறையை முடிவு செய்து, முதல்வரின் ஒப்புதல் பெற்று விரைவில் அறிவிக்கப்படும்.அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி களுக்கு அபராதம் விதிக்கப்படும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும், வீட்டில் இருந்து கல்வி கற்க வசதியான, நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.