நெல்லை: திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில், நடப்பாண்டு முதல் கூடுதலாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்படுவதாகவும், இதனால், 250 மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் பயனினாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டமுதல்வர்,  பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டியவர், தென் மாவட்டங் களில் தொழில் தொடங்க வருபவர்களுக்கு மானியம், சலுகைகள் தருவதாக அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நெல்லை மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை யில் மேலும்  100 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது 150 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டு வரும் நிலையில், இனிமேல் ஆண்டுக்கு 250 மாணவர்கள் புதிதாக மருத்துவப் படிக்க சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

முன்னதாக திருநெல்வேலி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த  வழியில், தூத்துக்குடி மாவட்ட எல்லையில் முதலமைச்சருக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஐூ தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. சண்முகநாதன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அறங்காவலர் குழு தலைவர் மோகன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகரன், முக்கிய பிரமுகர் ஆறுமுகநயினார் ஆகியோர் மலர்கொத்து வழங்கி வரவேற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் புத்தகம் வழங்கி வரவேற்றார்.