கெய்ரோ:

எகிப்து தேவாலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் அமைந்துள்ள ஹெல்வான் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலய வாயிலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதி துப்பாக்கிச்சூடு நடத்தினான்.

இதில் 2 ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.