டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,554 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டும், 6322 பேர் டிஸ்சார்ஜம் செய்யப்பட்டு உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதில், நேற்று புதிதாக மேலும்  5,554 ஆக பதிவாகியுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 1.47 சதவிகிதமாக உள்ளது.

தற்போது,  நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 48,850 ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,139 பேர் ஆக உள்ளது.

இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,39,13,294 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2,14,77,55,021  கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 21,63,811  டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.