சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் 3,367 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 196 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ்நடு முழுவதும் நேற்று ஒரேநாளில் புதியதாக மேலும் 3,367 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,06,848 பேர் ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,196 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் கொரோனாவிலிருந்து 3,704 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 24,39,576 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா வார்டில் 34,076 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநில தலைநகர் சென்னையில் நேற்று  கொரோனாவால் 196 பேர் பாதிக்கப்பட்டதுடன் சேர்த்து மொத்த பாதிப்பு 5,34,037 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று  6 பேர் மட்டும் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளார். இதுவரை 8,238 பேர் கொரோனாவுக்கு பலியாககி உள்ளனர்.

அதேவேளையில் நேற்று மட்டும்  304 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,24,145 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,654 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

07.07.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 26,64,712 பேருக்கும், 07.07.2021 அன்று 1,251 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மண்டலம் வாரியாக பாதிப்பு: