சென்னை: தமிழகத்தில் நேற்று  கொரோனா வைரசால் 3,211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று  189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில், புதியதாக மேலும்  3,211 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில்,  இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,10,059 பேர் ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில்,  சிகிச்சை பலனின்றி 57 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை  கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,253 ஆக அதிகரித்துள்ளது.

அதே வேளையில் நேற்று  கொரோனாவிலிருந்து 3,565 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 24,43,141 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து‘ள்ளனர்.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும 33,665 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சென்னையில் 1,657 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தலைநகர் சென்னையில் நேற்று 189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,34,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிர் இழந்துள்ளதுடன், இதுவரை 8,245 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 263 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் தொற்றின் பிடியில் இருந்து விடுபட்டோர் மொத்த எண்ணிக்கை  5,24,408 ஆக உயர்நதுள்ளது.

08.07.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 26,75,235 பேருக்கும், 08.07.2021 அன்று 10,523 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மண்டலம் வாரியாக விவரம்: