டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3545 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி,  நேற்று கொரோனா பாதிப்பு நாளில் 3,275 ஆக இருந்த நிலையில் இன்று  3,545 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,94,938 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. நேற்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். இது நேற்று முன்தினம்  55 ஆக இருந்த நிலையில்  மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,002 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த ஒரே நாளில் 3,549 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,25,51,248 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19,688 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 16,59,843 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது   இதுவரை 1,89,81,52,695 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும்  எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.