சென்னை: தமிழகத்தில்,  இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில், இன்று தமிழகத்தில் இன்று மட்டும் 1,75,365 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 2,78,64,752  ஆக இருக்கின்றது.

இன்று புதிதாக 21,410  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,16,812 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில்  443 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,571 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இன்று 32,472 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,32,778 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் 2,57,463 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று 1,789 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  5,15,018 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 7425 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 4158 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 48,33,03 பேர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 24,290 பேர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு: 

அரியலூர் 192
செங்கல்பட்டு 862
சென்னை 1,789
கோவையில் 2,663
கடலூர் 590
தர்மபுரி 370
திண்டுக்கல் 298
ஈரோடு 1,569
கள்ளக்குறிச்சி 226
காஞ்சிபுரம் 372
கன்னியாகுமரி 633
கருர் 322
கிருஷ்ணகிரி 359
மதுரை 468
நாகப்பட்டினம் 510
நாமக்கல் 682
நீலகிரி 517
பெரம்பலூர் 158
புதுக்கோட்டை 137
ராமநாதபுரம் .133
ராணிப்பேட்டை 283
சேலம் 1,171
சிவகங்கை 146
தென்காசி 291
தஞ்சாவூர் 929
தேனி 391
திருப்பத்தூர் 336
திருவள்ளூர் 525
திருவண்ணாமலை 482
திருவாரூர் 431
தூத்துக்குடி 358
திருநெல்வேலி 271
திருப்பூர் 1,104
திருச்சி 651
வேலூர் 248
விழுப்புரம் 471
விருதுநகர் 472