சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1568பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு  உள்ளது. இதில் 162 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,568 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.  இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,19,511 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 162 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,980 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  25,68,161 ஆக உயர்ந்துள்ளது.  தற்போது மாநிலம் மழுவதும்  கொரோனா வார்டில் 6,370 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,60,742 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,27,93,906 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன் 162 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,  மொத்த பாதிப்பு 5,44,.648 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் மட்டுமே  உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8,405 ஆக உயர்ந்துள்ளது. இன்று 172 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5,34,523 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1720 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்:

அரியலூர் 11
செங்கல்பட்டு 88
சென்னை 162
கோயம்புத்தூர் 239
கடலூர் 55
தர்மபுரி 22
திண்டுக்கல் 9
ஈரோடு 125
கல்லக்குறிச்சி 23
காஞ்சிபுரம் 36
கன்னியாகுமரி 19
கரூர் 12
கிருஷ்ணகிரி 18
மதுரை 11
மயிலாடுதுறை 25
நாகப்பட்டினம் 27
நாமக்கல் 62
நீலகிரி 27
பெரம்பலூர் 6
புதுக்கோட்டை 18
ராமநாதபுரம் 3
ராணிப்பேட்டை 10
சேலம் 58
சிவகங்கை 13
தென்காசி 4
தஞ்சாவூர் 108
தேனி 9
திருப்பத்தூர் 7
திருவள்ளூர் 65
திருவண்ணாமலை 38
திருவாரூர் 30
தூத்துக்குடி 15
திருநெல்வேலி 14
திருப்பூர் 98
திருச்சி 58
வேலூர் 15
விழுப்புரம் 25
விருதுநகர் 3