சென்னை

நேற்று முன் தினம் விடியற்காலை விமானத்தை பிடிக்க மனைவியுடன் விமான நிலையம் வந்த தோனி அங்கேயே தூங்கி ஓய்வெடுத்துள்ளார்.

சென்னை சூபர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் செவ்வாய் இரவு சென்னையில் மோதின.   இதில் தோனியின் தலைமையிலான சென்னை அணியின் வெற்றிக்கு பிறகு அந்த அணி ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோத கிளம்பியது.

ஜெய்ப்பூர் விமானம் அதிகாலையில் கிளம்புவதால் தோனி தனது மனவியுடன் சென்னை விமான நிலையத்துக்கு நடு இரவில் வந்துள்ளார்.   அவர்களுடன் சென்னை சூபர் கிங்ஸ் அணியினரும் வந்துள்ளனர்.

இரவு வரை கிரிக்கெட் ஆடிய களைப்பில் தோனி விமான நிலையத்தில் வெறும் தரையில் படுத்து  உறங்கி உள்ளார்.

தோனியின் மனைவி சாக்‌ஷி அவரது தலைமாட்டில் எதிர்புறமாக படுத்து உறங்கி உள்ளார்.   இந்த புகைப்படத்தை தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.   இந்த புகைப்படம் பலராலும் பதியப்பட்டு வைரலாகி உள்ளது.